Wednesday, 25 April 2012

ஆழத்தில் மயக்கம் என்ன

நியூ ஹொரைசான் மீடியாவின் "ஆழம்"  மாதாந்திரி இதழின் பிப்ரவரி மாத மாதிரி இதழில் 'மயக்கம் என்ன' சினிமா  விமர்சனம் எழுதும் வாய்ப்பு கிடைத்து எழுதி இருந்தேன். பதிவில் பகிர்ந்து கொள்ள நினைத்து மறந்தே போய்விட்டது. திரு.பத்ரி சேஷாத்ரி  இந்த இதழ் குறித்து அறிவித்து இருக்கும் பதிவில் இருந்து பிப்ரவரி 2012 இதழை நேரம் கிடைக்கும் போது டவுன்லோடு செய்து 82ஆம் பக்கத்தை பார்க்கவும் :)

Sunday, 25 December 2011

ராஜபாட்டை விமர்சனம்.

நண்பன் ட்ரைலர் சூப்பர். இலியானா அழகோ அழகு. மூக்கு இடிக்கிற சீன் உட்பட ஒன்றையும் மாற்றவில்லை போல. சத்யன் கேரக்டர் பேரு ஸ்ரீவத்சன். அக்கா ரோலில் அனுயா. சஹானா சாரல் மாதிரியே செட் போட்டு ஒரு பாடல்.
 
வேட்டை ட்ரைலர் நச். அண்ணன் கோழை போலீஸ் மாதவனுக்காக தம்பி தைர்யசாலி ஆர்யா திரைமறைவில் போலீஸ் வேலை செய்வார் என்பதாக கதையை ஊகிக்க முடிந்தது. அமலா பால் செமையாக இருக்கார். சமீரா கூட ஓகே.
 
ஓ பை த வே,  ராஜபாட்டை ச்ச்சே!

Wednesday, 7 September 2011

தேங்க்ஸ்மா


பாண்டிச்சேரி ராஜா தியேட்டர்.
நாள்: ஆகஸ்ட் முப்பத்தொன்னு.
நேரம்: காலை ஆறேகால் மணி.

நாங்க அந்த வழியா ஒரு கல்யாணத்துக்கு போய்க்கிட்டுருந்தோம்.
"மலையோடு மோது தலையோட மோதாத...இப்படிக்கு தல In தம்பிகள்" ன்னு போஸ்டர். ஏகப்பட்ட பேர் டிக்கட் வாங்க க்யூவில் நிக்கறாங்க.

"கல்யாணத்தை கட் பண்ணிட்டு நாமளும் போய் க்யூவில் நின்னுருவோமா?"

"அட்லீஸ்ட் இந்த கூட்டத்தை படமெடுத்து ட்விட்டர்ல போடணும்."



மாயாஜால். சென்னை.

"கெடைக்காது. ரெண்டு நாள் தான் ஆகுது படம் வந்து. வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேற. இதெல்லாம் ஓவர் கான்பிடன்ஸ். பேசாம நேரா வீட்டுக்கே போலாம். நேரத்துக்கு வந்தோம்ன்னாவது இருக்கும்."

" ட்ரை பண்லாம் வா."

கவுண்டர்ல போய் "மங்காத்தா மூணு டிக்கட் வேணும்; இருக்கா?"

"வாங்க வாங்க, எந்த ஷோ வேணும்? 5:30, 6:15?? Which row you want sir?"

உடனே என் தம்பிக்கு போன் போட்டேன். "டேய் டிக்கட்லாம் கிட்ட தட்ட சும்மா தராய்ங்க"

"ஏண்டீ இன்னுமா நீ அஜீத் படமெல்லாம் பாக்கற?"

"என்ன தான் அஜித்தை வெறுத்துட்டாலும் அவர் படம் ரிலீஸ் ஆகறப்போ இந்த படமாச்சும் ஓடனும்ன்னு மனசுல ஒரு ஆசை வருதுடா"

"சரி பாத்துட்டு போன் பண்ணு"

Ok,  relax இதுக்கு மேல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நாப்பது வயசுன்னு எல்லாம் தல இமேஜ் பாக்காதது, படத்துல கடைசில திருடனை போலீஸ் ஆக்காம போலீசை திருடனாக்குனது, வெளையாடு மங்காத்தான்னு நடன முயற்சி,நானும் மாஸ் ஹீரோன்னு foul language பேசினது, 'ஆறு மாசத்துக்கு பிறகு'ன்னு போட்டு ஹீரோயினோட பாட்டு பாடற மாதிரி டெம்ப்ளேட் இல்லாம த்ரிஷாவ அப்டியே அழுகாச்சியா கழட்டி விட்டது etc etc, இதை எல்லாம் நான் திரும்ப அரைக்க போறதில்லை.

படம் முடிஞ்சு என் தம்பிக்கு ஒரு போன் போட்டேன்.

"செம படம் டா"

-----------------

மங்காத்தா பற்றிய ட்வீட்களில் எனது பேவரைட்.

ராகவன்,அன்புச்செல்வன்,துரைசிங்கம் இவங்க எல்லாம் ட்யூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் விநாயக் சஸ்பென்ஷன்ல இருந்தாலே படம்ஓடும்

via @SAIALAGAPPAN.

----------------

இது ஏகப்பட்ட(எத்தின்னு எல்லாம் கேக்கப்படாது) லைக்குகள் வாங்கிய என் பேஸ்புக் ஸ்டேடஸ்.

Vinayak Mahadevan was a good one from Ajit.
---------------

சமீபத்தில் வாசித்தது 'ஒரே ஒரு துரோகம்'. வாசிக்க காத்திருப்பது 'Revolution 2020' மற்றும் 'மூன்றாம் உலக போர்' புத்தகமாக எப்போது வருமென்று.

---------------

அதே சூப்பர் சிங்கரை தான் விடாமல் பார்த்துட்டுருக்கேன். கிருஷ்ணமூர்த்தியை ரவியும், ரவியை அல்காவும் மறக்கடித்தது போல் இந்த சீசனில் அல்காவை யாரும் மறக்கடிக்க வில்லை எனக்கு. அதனால் பேவரைட் என்று யாருமில்லை.

சொல்ல மறந்துட்டேனே... பாண்டிச்சேரி கடலூர் சாலையில் டிரைவ்
பண்ணிக்கொண்டிருக்கும் போது Kathir சடன் ப்ரேக் அடித்து சொன்னார்.

"ஹே இங்க பாரு அல்கா வீடு."

Anugraha Satellite Township :)

--------------


எங்கள் கல்லூரி ஹாஸ்டல் மற்றும் என் கசின்கள் நிறைய பேர் எழுத்தாளர் ரமணி சந்திரன் அவர்களின் தீவிர ரசிகைகள். நானும் ஆரம்பத்தில் சில நாவல்கள் படித்து இருக்கிறேன். அவர் ஒரே கதையை பேரையும் ஊரையும் மாத்தி போட்டு நடு நடுவே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு சுத்தி சுத்தி அடிக்கறாரோ என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது.சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து சில அத்தியாவசியமான கருத்துக்களை அனாயாசமாக சொன்னார். பெண் சுதந்திரம் என்பதில் இருக்கும் தவறான புரிதலை தாம்பத்தியத்துக்குள் நுழைக்க முயன்ற கருத்துக்களுக்கு அற்புதமாக பதிலடி கொடுத்தார். ஒரு பெண் "என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்ததும் அவருடைய ஷூவை கழற்றி விடுவது எனக்கு மிகவும் பிடித்த வேலை" என்று சொல்லி எதிரணியினரின் கேலிக்கு ஆளானார். "அவரும் இத மாதிரி உங்க ஷூவை கழற்றி விடுவாரா? " என்பது எதிரணியின் கேலி கேள்வி. நம்ம எழுத்தாளர் அழகாக சொன்னார், "அந்த கணவர் தன மனைவியிடம் ஷூவை கழற்றி விட உத்தரவிட்டு அதை அந்த பெண் கடமைக்காக செய்தால் மட்டுமே இது பெண்சுதந்திர பிரச்சனை. அந்த பெண் தானே விரும்பி செய்யும் வகையில் இதை சுதந்திரத்தோடு சம்பந்தபடுத்தி விவாதிக்க வேண்டியதில்லை.அதே போல அந்த கணவர் திரும்ப அந்த பெண்ணுக்கு ஷூவை கழற்றி விட்டு தான் தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை, தலையை தடவி கொடுத்தலில் கூட தன் நன்றியை வெளிப்படுத்தலாம். நீ செஞ்சா நான் செய்வேன் என்பது தவறான புரிதல்"

முழு நிகழ்ச்சியும் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்.

link via @sathishvasan
--------------


இடம் பாண்டிச்சேரி பீச்

ஒரு புதிதாக திருமணமான ஜோடி (ன்னு நெனைக்கிறேன்)

கணவர் வளைத்து வளைத்து மனைவியை போட்டோ எடுத்து கொண்டு இருந்தார். நான்: பாருங்க, மனைவியை ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுக்கறார். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். ஹம்ம்.

கதிர்: உக்கும். டிஜிடல் காமெரா இருக்கதால எடுக்கறாய்ங்க. இதே அந்த பழைய ரோல் காமெரா வாங்கி கொடு. ஒவ்வொரு பிலிமும் காசு.ஒரு பய போட்டோ எடுக்க மாட்டான்.

---------------

எனக்கு காலை ஆறரையில் இருந்து ஏழரை ஒரு மூன்று மணிநேரமாக இருந்தால் நலம். அர்ஜூனை எழுப்புவது முதல் பள்ளிக்கு அனுப்பும் நேரம். இன்றைக்கு காலை சற்று பரபரப்பு அதிகமாகி விட்டது. நான் எழுந்திருக்க தாமதம். கீரை நேற்றே நறுக்கி வைக்காததால் தாமதம். இதனால் அவனை எழுப்புவது தள்ளி போய் கிளப்புவதில் ஒரே அவசரம். எப்படியோ வாயில் சாப்பாடை திணித்து, ஸ்நாக்ஸ் பாக்ஸ் பேக்கிங் எல்லாம் முடித்து கரெக்டாக கிளப்பி விட்டேன். கதவு வரைக்கும் போனவன் என்ன நினைத்தானோ திரும்பி பார்த்து சொன்னான். "தேங்க்ஸ்மா"
--------------

Wednesday, 9 March 2011

ஒரு மூக்கு கதை

மூக்கில் என்னவெல்லாம் போடலாம்?பெண்கள் மூக்குத்தி போடலாம். கணவனுக்கு பிடித்தால். மூக்கே குத்தாமல் நயன்தாரா மாதிரி வளையம் போட்டுக்கலாம். சளி பிடித்தால் விக்ஸ் போடலாம். கொஞ்சம் அதிரடியான ஆளாக இருந்தால் டைகர் பாம் ஜண்டு பாம் கூட போடலாம்.மூக்குப்பொடி போடலாம்.மூக்கின் மேல் கண்ணாடி போடலாம். அடுத்தவர் விஷயத்தில் நாம மூக்கையே கூட போடலாம். ஆனால் மூக்குக்குள் ஆரஞ்சு பழ கொட்டையை போடலாமோ? எங்க அர்ஜுன் போட்டுக்கிட்டான்.



முந்தா நாள் இரவு, குடும்பமாக ஹாலில் உட்கார்ந்து இருந்தோம்.டிவியில் அயர்லாந்துடன் இந்தியா மேட்ச்.'யூசுப் பத்தனை அனுப்பாமல் டோனி ஏன் பேட்டிங் பண்ண வந்தான்?' என்று ட்வீட்டிக்கொண்டு சைடில் ஆபீஸ் வேலை. சோபாவில் உட்கார்ந்து இருந்த அர்ஜூன் திடீர்ன்னு "அம்மா மூக்கு..."ன்னான்.

வயிற்றில் அர்ஜுன் இருந்த பத்து மாதமும் கடவுளுக்கு வித விதமான கோரிக்கை வைப்பேன். அதில் ஒன்று என் குழந்தைக்கு எனக்கு மாதிரி சப்பை மூக்கு இருக்க கூடாதென்பது. ஆனால் கேட்டதற்கு மாறாக அதே மாதிரி மூக்கு. நூலை போல் சேலை.

"அம்மா நீ எனக்கு சின்ன வயசில் மூக்கை நல்லா நீவி விட்டு இருந்தா இப்போ இப்டி சப்பையா இருந்து இருக்காதில்ல?" அடிக்கடி எங்கம்மாவிடம் இதை கேட்பேன்.

"ஏதோ நீவி விட்டதால தான் இந்த அளவாவது இருக்கு.பொறந்தப்போ மூக்கு இருக்க வேண்டிய எடத்துல ரெண்டே ரெண்டு ஓட்டை மட்டும் தான் இருந்துச்சு தெரிஞ்சுக்கோ" தவறாமல் இப்படி பதில் சொல்வாங்க எங்கம்மா.

எனக்கு சுபா என்றொரு தோழி இருந்தாள். எனக்கு நேர்மாறாக அவளுக்கு ரொம்ப பெரிய மூக்கு. நாங்கள் இருவரும் அடிக்கடி சொல்லிக்கொள்வோம். "கடவுள் நம்ம ரெண்டு பேர் மூக்குலயும் ஒரு ஒரு இன்ச்ல வெளாடிட்டார்"ன்னு...பிரேமலதான்னு ஒரு ஸ்கூல் மேட். அவளுக்கு திடீர்ன்னு விபரீத கற்பனைகள் வரும். திடீர்ன்னு ஒரு நாள் "மனுஷனுக்கு மூக்கே இல்லன்னா முகத்துக்கு சோப்பு, பவுடர்லாம் போடும் போது நடுவுல இடிக்காது" ன்னா. "த்ரீ இடியட்ஸ்" படத்துல அமீர்கானுக்கு கடைசி சீன் வரை கிஸ் பண்றப்போ மூக்கு இடிக்குமான்னு உலக மகா சந்தேகம் இருக்கும்.

சரி கதைக்கு வருவோம்.

"அம்மா மூக்கு..."

"மூக்குக்கு என்னடா?"

"கண்ணாடி எடுத்துட்டு வாங்க, பாக்கணும்"

"ஆமா இப்போ எதுக்கு கண்ணாடி?"

"ஆரஞ்சு விதையை மூக்குள்ள போட்டுக்கிட்டேன்"

"என்னது?"

.

.

.

பதறி போய் மூக்குக்குள் டார்ச் அடித்து பார்த்தால் ஒரு ஆரஞ்சு விதை இருப்பது தெரிந்தது. எனக்கு மூச்சடைத்தது. ஞாயிற்றுக்கிழமை அதுவும் அந்த நேரத்தில் எங்கள் ஏரியாவில் டாக்டர் கிடைப்பதென்பது அயர்லாந்துடன் டாஸ் ஜெயித்தும் பவுலிங் என்றாரே டோனி அது மாதிரி ஒரு முரண். 24*7ஆஸ்பத்திரி உதவியை தான் நாட வேண்டும். அவர் வேறு ஊரில் இல்லை. நானே ஏதாவது முயற்சி செய்து ஆரஞ்சு விதையை எடுக்க பார்க்கலாமா என்று யோசித்தேன். ஒரு துணியை சுருட்டி மூக்கின் இன்னொரு துளையில் விட்டால் தும்மல் போட்டு அந்த விதை வெளியில் வந்து விடலாம் என்ற நப்பாசையில் முயற்சித்து கொண்டிருந்தேன்.பதட்டத்தில் கை நடுக்கம். இப்படி பண்ணிவிட்டானே என்று கோவம்.

கீழ்வீட்டில் ஒரு பெண். அனஸ்தீசியா நிபுணர்.சமயோசிதமாக அவரிடம் ஓடி இருக்கிறார் என் மாமியார். 'இந்த மாதிரி நிலைமை என்ன செய்யலாம்' என்று கேட்டதும் அவர் இவனை அவர் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாராம். அங்கே எடுத்து கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அவர்கள் வீட்டில் forceps வைத்து இருந்தார்கள். ஒரு பவர்புல் டார்ச்சை வைத்து இவன் மூக்கிற்குள் லைட் அடித்து பார்த்து, 'அப்படியே உள்ளே தள்ளிவிட்டால் தொண்டைக்குள் போய் விடும், துப்பி விடலாம் அல்லது முழுங்கி விடலாம்' என்றார். எனக்கு என்னவோ அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருந்தது. 'முடிந்தால் வெளியில் எடுத்து விடுங்களேன்' என்றேன்.

அவர் போர்செப்சை இவன் மூக்கிற்கும் கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக இவன் கண்களை மூடிக்கொண்டு போர்செப்சை மூக்கிற்குள் கொண்டு போயும், இவன் திமிறிய திமிறில் மூக்கிற்குள் பட்டு ரத்தம் கொட்டிவிட்டது. அடுத்தவர் வீட்டில் வைத்து பொங்கிக்கொண்டு வரும் அழுகையை அடக்குவது மிக சிரமம்.எப்படியோ சமாளித்தேன்.

ஆரஞ்சு கொட்டையை எடுத்து விட்டு, இவன் மூக்கை துடைத்து ஆன்டிசெப்டிக் ஜெல் எல்லாம் போட்டு விட்டார்கள். இவனும் சற்று அமைதி ஆனான். அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது கவனித்தேன். ஒரு போர்டு வைத்து தினம் ஒரு குறள் என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

அன்றைய குறள்
காலத்தினார் செய்த நன்றி...


மறுநாள் ஆபிசில் ஒரு பெண்ணிடம் 'அர்ஜுன் இப்டி பண்ணிட்டான்' என்று
புலம்பிக்கொண்டு இருந்தேன்.

"All kids do this yaa. I also put a greenpea in my nose when I was small. You ask you mom; you would have done something similar" என்றாள். உடனே எங்கம்மாவிற்கு போன் செய்தேன்.

'அம்மா நேத்து ராத்திரி அர்ஜூன்....'

'...அச்சச்சோ அப்றோம்?'

..
..
..
"பாரும்மா...அவங்கப்பா வேற ஊர்ல இல்லாத நேரத்துல என்னை எப்டி படுத்தி வெக்கறான்னு"

"ச்ச குழந்தையை திட்டாதே. நான் கூட சின்ன புள்ளையா இருந்தப்போ இப்படித்தான் மருதாணி விதையை மூக்குல போட்டுக்கிட்டேனாம்; உங்க அம்மாச்சி சொல்வாங்க"

*******

Friday, 21 January 2011

IPL

ஐபிஎல் ஏலம் குறித்த எனது பதிவு இட்லிவடையில் வெளியானது.


படிக்க இங்கே கிளிக்கவும்.

Thursday, 30 December 2010

ஒரு இடம், ஒரு படம், சில புத்தகங்கள்

சென்ற மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு எங்காவது போய் வரலாம், என்று பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் வேலூருக்கு சற்று முன் இருக்கும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்திற்கு( வேலூர் பொற்கோவில்) சென்றோம்.அன்று இரவே வெகு உத்வேகத்துடன் ஒரு பதிவை ஆரம்பித்து சிறிது எழுதி, பிறகு இதை எழுத கூடாது, அதை எழுத கூடாது என்று அழித்து கடைசியாக ஒரு எம்ட்டி பைல் டெஸ்க்டாப்பில் ஒரு மாதமாக தூங்குகிறது. இப்போது எல்லாம் மறந்து நினைவில் இருப்பது இரண்டே விஷயங்கள். ஒன்று அவ்வளவு பெரிய இடத்தின் சுத்தமும், நேர்த்தியான பராமரிப்பும். இன்னொன்று கியூவில் போய் கொண்டு இருக்கும் போது முன்னால் இருந்த இரு பையன்கள். பெங்களூர் போலும். "இவ்வளவு பெரிய இடம் பெங்களூரில் கிடைத்து இருந்தால் டெக் பார்க் கட்டிருப்பாங்கடா, இங்கனால கோயில் கட்டிட்டாங்க' ன்னு பேசிக்கொண்டார்கள்.

---000---

மன்மதன் அம்பு.

பதிவில் இந்த இடம் வந்ததும் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாக pause. Sigh. Sniff.

தசாவதாரத்தில் ஒரு சீனில் பாட்டி பீரோக்குள் பூட்டி கொள்வார். வெளியில் இருந்து தட்டி அசின், "பாட்டி சித்த வெளிய வரேளா?" என்பார்.

பாட்டி: மாட்டேன், அந்த கட்டால போறவன் அங்கே தான் இருக்கானா?

அசின்: எந்த கட்டால போறவன்? இங்க நெறைய பேர் இருக்கா!

உன்னை போல் ஒருவன்
கமல்: எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனா அது எழுதுறதுல மட்டும்.

இப்படி சொந்த கருத்துக்களை (அடுத்தவன் காசுல) வசனமா எழுதி பார்க்கும் கமல் இந்த படத்தில் சற்று அதிகமே கடுப்பேத்துகிறார்.

ஹம்மரில் வாதிட்டு கொண்டே செல்லும் த்ரிஷாவும் மாதவனும் பேசிக்கொள்ளும் அதிமேதாவித்தனமான வசனங்களை சொல்வதா, சொந்த குரலில் தமிழ் பேசி நடித்து விட்டதற்காகவே "தமிழ் கவிதையால் தான் நாக்கு வழிக்கிறேன்" என்று த்ரிஷா பேசும் அமெச்சூர் வசனத்தை சொல்வதா, Matrimony/Alimony என்று சங்கீதாவின் வசனத்தை சொல்வதா...மாதவன் ஒரு இடத்தில் 'kyonki mere paas maa hai"என்று ஹிந்தியில் வேறு பேசுகிறார். இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. எங்கென்று தான் நினைவு வரவில்லை.

சென்னையை தாண்டி செங்கல்பட்டு வந்துட்டாலே இந்த வசனங்களை புரிந்து கொள்வதெல்லாம் சிரமம். எங்க ஊருகாரங்களை எல்லாம் நினைத்து பாருங்கள். சென்னையில் இருந்து நானூறு கிலோமீட்டர். வெறுமே கப்பல் பார்க்க எல்லாரும் படத்துக்கு வருவார்கள் என்று நினைத்து விட்டார் போலும்.

பஞ்ச தந்திரத்தில் ஒரு சீனில் குடித்து விட்டு சிம்ரன் வீட்டின் சுவரேறி குதிப்பார். "யாராவது பாத்துட்டாங்கன்னா என் துப்பில மூஞ்சிடுவாங்க" ம்பார். அதுக்கு தியேட்டரில் எல்லாரும் சிரிச்சாங்கன்னு இந்த படத்துல மாதவனை படம் முழுக்க தண்ணி போட்டுட்டு அதே மாறி பேச வச்சுருக்கார். என்ன கொடுமை இது உ.நா?

ஒரு நடிகராக கமலஹாசனின் ரசிகை தான் நானும். ஆனால் இந்த படத்தில் அவர் பண்ற எல்லா வித்தைகளையும் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் ட்ராக்கில் அடக்கி வாசித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது.

தசாவாதரத்தில் கிருஷ்ணவேணி பாட்டியையும் ஆராவமுதனையும் லிங்க் பண்ணிய அதே திரைக்கதை ஆசிரியரா இந்த கிளைமாக்ஸ் பண்ணியது?
What happened to Kamal? Is he too tired just as he looks in the movie?

 சரி அக்கட பூமியில் எப்படி ஓடுகிறது என்ற அக்கறையில் எங்க டீமில் இருக்கும் ஒரு அண்ணையாவிடம் "மன்மத பானம் எலா ச்சேஸ்துந்தி மீ வூருலோ?  என்றால் அவர், "மன்மத பானம்னி ஒத்துலேயி, மொன்ன மருத நாயகமணி வொக்க பிலிம் பூஜ ச்சேஸாரே மீ   கமலஹாசனு...அதி ஏமாயிந்தி? ன்னார். History is always remembered.


---000---

கடந்த இரண்டு மாதங்களில் அசோகமித்ரனின் மானசரோவர், சுஜாதாவின் நைலான் கயிறு,சிவந்த கைகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, 
மற்றும் சில சிறுகதைகள் படித்தேன்.

நைலான் கயிறு தான் சுஜாதாவின் முதல் நாவலாமே? என் இனிய இயந்திரா, எந்திரனாகி இருக்கிறது.அதிலும் மீண்டும் ஜீனோ கடைசி காட்சியில் பார்ட் பார்ட்டாக கழண்டு போன ஜீனோவை மியூசியத்தில் போய் காட்சி பொருளாக வரிசையில் நின்று பார்ப்பார்கள்..:-) Same blood.

கல்லூரி ஹாஸ்டலில் நிறைய பெண்கள் மில்ஸ் அண்ட் பூன் என்று பேசிக் கொள்வார்கள். நானும் அது ஒரு எழுத்தாளர் பெயர் என்றே வெகு நாட்கள் நினைத்து இருந்தேன்.பிறகு தான் தெரிந்தது.அது ஒரு பதிப்பகம். நானும் வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு மில்ஸ் அண்ட் பூன் படித்தேன். பிறகு இன்னும் சிலவற்றை கதை சுருக்கம் மட்டும் வாசித்தேன். எல்லாம் ஒரே டெம்ப்ளேட். ஒரு பணக்கார ஆண், அவனுடன் கமிட் ஆன ஆனால் காதல் இல்லாத ஒரு திமிர் பிடித்த பெண், இன்னொரு அழகான பெண் ஆனால் வாழ்க்கையில் ரொம்ப நொந்து போன, கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள். நடுவில் இருக்கும் பெண்ணை கழற்றி விட்டு இவர்கள் இருவரும் சேர்வார்கள். எங்கேயோ படித்த மாதிரி இருக்குமே? ஆமாம், அதே ரமணிச்சந்திரன் டெம்ப்ளேட் தான். தமிழில் இவர் என்றால் ஆங்கிலத்தில் 'மி அ பூ' போலும். ஆளை விடுங்கப்பா என்று மூடி வைத்து விட்டேன்.

---000---

டிவிட்டர் நிறைய பேருக்கு செல்ல பிள்ளையான பிறகு ப்ளாக்ஸ்பாட் எடுப்பார் கைபிள்ளை ஆகி போனது தெரிந்த விஷயம்.நானும் இருக்கிறேன் டிவிட்டரில்(@priyakathiravan).

( ஆ. ராசா ஹாஸ்பிடலில் சேர்ந்தது மாதிரியான) செய்திகளை சுட சுட தருவதோடு, சுவாரஸ்யமான லிங்குகள், படங்கள், பொன்மொழிகள், பிரபல பதிவர்களின் பொது அரட்டை என்று டிவிட்டர் ஒரு நல்ல பொழுது போக்கு களம்.  'வெறும் நூத்தி நாப்பது தான். அதுக்குள்ள சொல்ல வந்ததை நச்ச்சுன்னு சொல்லு' என்று டிவிட்டர் வைக்கும் சேலஞ்சை நீந்தி கடப்பவர்கள் சாமர்த்திய சாலிகள்.இங்கே மட்டைக்கெல்லாம் மதிப்பில்லை 20-20 மாதிரி அதிரடியாக ஆட வேண்டும்.'மழைக்கும் பனிக்கும் இடையேயான ஏதோ ஒன்றில் நனைந்து கொண்டே ஆபீஸ் வந்தேன்' என்று சொன்னால் ஒருத்தர் சீண்ட மாட்டார்கள். அதே "பெங்களூர் கிளைமேட் செம மப்பில் இருக்கிறது" என்று சொல்லுங்கள். எல்லாருக்கும் பிடிக்கும். Learning yet.

 சமீபத்தில் எனது பேவரிட்டில் இடம் பிடித்த ட்வீட்.


என் ஹெட்போனில் விருதகிரி பாடல்கள்தான் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் அதைக் காதில் மாட்டவில்லை.(@writemugil)

யாரையாவது பாலோ பண்ணினால் சிரத்தையாக "So and so is following you in twitter" என்று மெயில் அனுப்பும் ட்விட்டர், unfollow பண்ணால் சமர்த்தாக அதை அவர்களுக்கு சொல்லாதாம்.  Suweet.
---000---


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wishing each of you a healthy, happy and peaceful 2010.

---/\---

Wednesday, 10 November 2010

Potpourri - October Edition

சன் டிவி தான் எந்திரனை விட மாட்டேன் என்கிறார்கள் என்றால் நானுமா? என்ன கொடுமை இது.

அலுவலகத்தின் அக்டோபர் மாத இணைய இதழில் வெளிவந்தது.

Archive வேண்டும் என்பதால் இங்கே சேமித்து கொள்கிறேன்.
புளித்த மாவு, சொரிந்து சொரிந்து... முதலான சாத்தல் கமெண்ட்டுகள் வேண்டாமே ப்ளீஸ்.

Endhiran - The Robot
----------------------
One dreamer, One hundred brilliant minds, one 60 yr old magician, electrifying a million hearts’

‘Breaking News - Its official now ...The missing piece of the Apple logo was eaten by Rajnikanth.’

‘Those who don't get tickets for Robot, watch my movie ‘Anjaana Anjaani’- Ranbir Kapoor’


These were few of the top tweets in October as it was 'Endhiran' fever all over.

“What if a Robot starts ‘feeling’?” That's the one liner of Endhiran – a science fiction, seasoned with love and sentiments to suit the Indian audience.

Chitty, an ‘artificial intelligence’ fed Robot, falls in love with his creator Vaseekaran’s girlfriend Sana. He kidnaps her and creates his own kingdom of super powerful robots. The rest is to watch on screen.

Shankar, the director, having done enough work in the past on corruption based stories, has taken up his mystical project, as he says so; relying on Rajini’s magic & Kalanidhi Maran’s finance & marketing. Rajni Kanth plays a dual role as Vaseekaran and Chitty. His performance as Chitty 2.0 is awesome and his fan base must be undoubtedly happy to see their hero back in negative roles as the late 1970s. Aishwarya Rai looks as graceful as ever.

It’s needless to talk about AR Rahman’s music? On the day of the audio launch, Endhiran broke all previous sales records across the globe and had occupied the number one position for the most number of downloads in Apple I-Tunes chart.

The songs sequences are a visual treat, especially the ones shot in Machu Pichchu and the Brazil desert.

The movie has a fast and witty first half but the second half is very lengthy. It lacks a crisp screen play. However the last 30 minutes of graphics show is commendable for an Indian movie.

My Verdict: Endhiran is a thorough entertainer and value for your money, though not better than Shankar and Rajini's earlier bests.